இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அதிபர் பதவி விலக வேண்டும் என மக்கள் போராடி வருகின்றனர். இன்று (17ம் தேதி) இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் தீர்மானத்திற்கு ஆதரவாக 68 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் பதிவாகியதால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில், திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறி உள்ளார். மகிந்த ராஜபக்சே தற்போது எங்கு இருக்கிறார் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…