தமிழகத்தில் தக்காளி விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகவும், வடமாநிலங்களில் இருந்து வரத்து குறைவாலும், தேவை அதிகரிப்பாலும் சென்னை கேயம்பேடு சந்தையில் தக்காளி விலை உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி இன்று கேயம்பேடு சந்தையில், ஒரு கிலோ தக்காளியின் விலை 70 முதல் 80 ரூபாய் வரை விற்பனையாகிறது. 25 கிலோ கொண்ட ஒரு தக்காளியின் பெட்டியின் விலை 1,600 ரூபாய்க்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள் வியாபாரிகள்.
விலை அதிகரிப்பால் பொதுமக்கள் தக்காளி வாங்க முன்வரவில்லை என வியபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…