மோட்டார் இன்சூரன்ஸ் தொகையை 2 ஆண்டுகளுக்கு பின் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் பல்வேறு வகை வாகனங்களுக்கான மூன்றாம் தரப்பு மோட்டார் இன்சூரன்ஸ் தொகையை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு ஜூன் 1 முதல் அமலாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,150 சிசிக்கு மேல் ஆனால் 350 சிசிக்குள் உள்ள இரு சக்கர வாகனங்களுக்கு ரூபாய்.1,366 ஆகவும், 350 சிசிக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு ரூ2,804 ஆகவும் இன்சூரன்ஸ் தொகை விதிக்கப்படும். மேலும், மின்சார வாகனங்களுக்கு பிரீமியத்தில் 7.5% தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் தரப்பு காப்பீடு என்பது சொந்த சேதத்தைத் தவிர, அதாவது எதிரே வரும் வாகனங்கள் மற்றும் மனிதர்களுக்கானது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…