சென்னை மாநகர பேருந்துகளில் சத்தமாக போனில் பேசத் தடை விதிக்க தமிழக அரசுக்கு மாநகர போக்குவரத்துக்கழகம் பருந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போனில் சத்தமாக பேசுவதாலும், பாடல் கேட்பதாலும், கேம் விளையாடுவதால் சக பயணிகளுக்கு இடையூறாக இருப்பதால் இவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என திருப்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் பொன்னுச்சாமி என்பவர் மனு அளித்தார்.
இந்நிலையில், பேருந்துகளில் சப்தமாக போன் பேசுவது, பாடல் கேட்பது, விடியோ கேம் விளையாடுவது உள்ளிட்டவைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…