விரைவில் தீபாவளி பண்டிகளி வர உள்ள நிலையில், தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க, காலை 6-7 மணி வரையும், இரவு 7-8 மணி வரையும் மட்டுமே அனுமதி வழங்கி மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட அறிக்கையில், "தீபாவளி அன்று காலை 6-7 மணி வரையும், இரவு 7-8 மணி வரையும் பட்டாசு வெடித்துக் கொள்ளலாம். பசுமை பட்டாசுக்களை மட்டுமே வெடிக்க வேண்டும்.
மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்பட வேண்டிய இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…