தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலக் கூடிய அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் மற்றும் மலைப்பகுதிகள் போன்ற இடங்களில் இருக்கும் 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. அதன் படி, இந்த பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் 1,14,095 மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல்கட்டமாக காலை உணவு திட்டம் நடைமுறைத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர் அவர்கள், இன்று காலை மதுரையில் தொடங்கி வைத்தார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, “பசித்த வயிறுக்கு உணவு, தவித்த வாய்க்கு தண்ணீராக இருக்கும் திட்டம் இது. எத்தகைய நிதிச்சுமை இருப்பினும், பசு சுமையைப் போக்குவதே முதல் இலக்கு ஆகும். இந்த காலை உணவு வழங்கும் திட்டமானது வரலாற்றில் நிலைத்து நிற்கும் திட்டம் ஆகும்” என்று கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…