ஓஎம்ஆர் சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
ஓஎம்ஆர் சாலை என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி தகவல் தொழில் நுட்ப விரைவு சாலையில் அமைந்துள்ள நாவலூர் சுங்கச்சாவடியில் 2036 ஆம் ஆண்டு வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கவும், ஆண்டுதோறும் ஜூலை மாதம் கட்டணத்தை உயர்த்திக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தற்போது சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி புதிய கட்டணமாக , "மூன்று சக்கர வாகனங்கள் ஒரு முறை பயணிக்க 11 ரூபாயும், ஒரு முறை சென்று திரும்ப ரூ. 22 , ஒரு நாள் முழுவதும் பல முறை பயணிக்க ரூ. 37, மாதம் முழுவதும் பயணம் செய்வதற்கான பயண அட்டை ரூ. 345 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பொட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவற்றால் அவதியடந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு கட்டணம் உயர்வு பெரும் சுமையாக அமைந்துள்ளதாக கூறி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…