தமிழகத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் பெற்றவர்களுக்கு, கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, இன்னும் ஒரு வாரத்திற்குள் ரசீது வழங்கப்படும் என தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது ஆளுங்கட்சியாக விளங்கும் திமுக அரசு பதவியேற்றபின் கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழு தள்ளுபடி குறித்த அறிவிப்புகளை வெளியிட்டது. அதன் படி, தற்போது கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடன் பெறுவதற்கு வைக்கப்பட்ட நகையும், உரிய பயனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் ராயபுரம் கூட்டுறவு வங்கி புதிய கிளையை திறந்து வைத்தார். இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், கடுமையான நிதி நெருக்கடி இருக்கும் இந்த சூழ்நிலையில், ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதும் ரூ.2750 கோடி மகளிர் சுய உதவி குழு கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.
அதன் படி, தீபாவளி முடிந்ததும் பெண்கள் சுய உதவிக் குழு மூலம் பெற்ற கடனை ரத்து செய்யவும், அதற்கான ரசீது ஒரு வாரத்தில் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். எவ்வாறு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டனவோ, அதே போல பெண்களுக்கான மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…