தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ஆன்லைன் ரம்மியால் பிரபு என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஆன்லைன் ரம்மியை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில், தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பிரபு என்பவர் ஆன்லைன் ரம்மியில் ரூ. 15 லட்சத்துற்கு மேல் இழந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர், திடீரென தூக்கிடு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…