கந்துவட்டியால் காவலர் ஒருவரே தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டாரெனில் சாமானியர்கள் நிலை என்னாகும் என எதிர்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூர் புவனகிரி அருகே கந்து வட்டி கொடுமை காரணமாக ஆயுதப்படை காவலர் செல்வகுமார்(27) விஷம் குடித்து தற்கொலை செய்தார். இதேபோல் பல பகுதிகளிலும் கந்து வட்டி கொடுமை புகார்கள் வருகின்றன. இந்நிலையில், கந்துவட்டி கொடுமை தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், புவனகிரி அருகே கந்துவட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் செல்வக்குமார் தற்கொலை செய்துள்ளார். கந்துவட்டியால் காவலர் ஒருவரே தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டாரெனில் சாமானியர்கள் நிலை என்னாகும்? கந்துவட்டிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…