Sun ,Oct 27, 2024

சென்செக்ஸ் 79,402.29
-662.87sensex(-0.83%)
நிஃப்டி24,180.80
-218.60sensex(-0.90%)
USD
81.57
Exclusive

அதிமுக அலுவலகத்தில் இருந்த ஓபிஎஸ் பேனர் கிழிப்பு

Bala June 27, 2022 & 12:14 [IST]
அதிமுக அலுவலகத்தில் இருந்த ஓபிஎஸ் பேனர் கிழிப்பு Representative Image.

 அதிமுக தலைமை அலுவலகத்தில் பேனரில் இருந்து ஓபிஎஸ் புகைப்படம் ஈபிஎஸ் ஆதரவாளர்கள்  கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது. 

சென்னை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், அதிமுகவுக்கு பல துரோகங்களை ஓபிஎஸ் செய்துள்ளார். துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் , எந்த அதிமுக தொண்டனும் திமுகவோடு உறவு பாராட்ட மாட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் மாறிவிட்டார் என கடுமையாக விமர்சித்துள்ளார். 
தொடர்ந்து பேசிய அவர், நிர்வாகிகள் கோரிக்கைக்கு இணங்க அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், 75 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்து கொண்டனர், 4 நிர்வாகிகள் கூட்டத்திற்கு வர இயலாது என கடிதம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து பேசிய பொன்னையன், அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் சட்டரீதியாக நடைபெற்றது.  கூட்டத்தை கூட்ட தலைமை நிலைய செயலாளருக்கு அதிகாரம் உள்ளது
பொதுவான கட்சி நடவடிக்கைகள் குறித்து விவாதித்தோம்
இன்று நடைபெற்ற கூட்டம் சட்ட ரீதியாக செல்லும் என கூறியுள்ளார். 

இதனைதொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் பேனரில் இருந்து ஓபிஎஸ் புகைப்படம் ஈபிஎஸ் ஆதரவாளர்கள்  கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்