டெல்லி பயணத்தை முடித்து கொண்டு ஓபிஎஸ் சென்னை புறப்பட்டதக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் ஒன்ற்றை தலைமை விவகாரம் தொடர்பாக நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவமதிக்கப்பட்டது பேசுபொருளாக மாறியது. இதனையடுத்து அன்று இரவே டெல்லி புறப்பட்ட ஒ.பன்னீர்செல்வம், ரவிந்திரநாத் தாகூர் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு வேட்புமனுத் தாக்கல் நிகழ்வில் அவர் பங்கேற்று அதிமுக முழு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார். இந்நிலையில், டில்லியிலிருந்து விமானம் மூலம் இன்று (ஜூன் 25) காலை ஓபிஎஸ் சென்னை புறப்பட்டதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…