Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஓபிஎஸ் மீது பாட்டில் வீசியதை எடப்பாடி ஏன் கண்டிக்கவில்லை...?

Bala June 24, 2022 & 18:46 [IST]
 ஓபிஎஸ் மீது பாட்டில் வீசியதை எடப்பாடி  ஏன் கண்டிக்கவில்லை...?Representative Image.

எம்ஜிஆர்,ஜெயலலிதா போல பெட்டியை வைத்து தேர்தலை நடத்த தயாரா என ஓபிஎஸ் ஆதரவாளரும் , அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான ஜே.சி.டி பிரபாகர் தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மூத்த நிர்வாகி ஜே.சி.டி. பிரபாகர்;  பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் மீது பாட்டில் வீசியதை எடப்பாடி பழனிசாமி ஏன் கண்டிக்கவில்லை; எனவே திட்டமிட்டு தான் அவமானப்படுத்தியுள்ளார்கள் என வேதனை தெரிவித்தார். மேலும், அதிமுகவை ஒழிக்க வேண்டும் என முடிவு செய்தால் எடப்பாடி பழனிசாமி சி.வி சண்முகத்தை பின் தொடரலாம்; அடிமட்டத் தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் இருப்பதை நான் பார்க்கிறேன் என பேட்டியளித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், அனைத்துப் பதவிகளுக்கும் எம்ஜிஆர்,ஜெயலலிதா போல பெட்டியை வைத்து தேர்தலை நடத்த தயாரா; அப்படி செய்தால் எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். யார் வெற்றி பெறுவார்கள் என்று தொண்டர்கள் மற்றும் நாட்டுக்கே தெரிந்துவிடும் என காட்டமாக தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்