திருச்சி மத்திய சிறைச்சாலை சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் தற்கொலை முயற்சித்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
திருச்சி மத்திய சிறைச்சாலை சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் , தங்களை விடுவிக்க கோரி 35வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திடீரென 30 பேர் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. இதனையடுத்து மாத்திரை உட்கொண்டவர்களை மீட்ட காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இன்று காலை மண்ணெண்ணை ஊற்றி ஒருவர் தீ வைத்து கொண்டுள்ளார். இதனைக்கண்ட அருகில் உள்ளவர்கள் சாக்கு மற்றும், துணிகளை கொண்டு உடம்பில் ஏற்ப்பட்ட தீயை அணைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…