எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் பொன்னையன் உயிருக்கு ஆபத்து, ஏற்ப்பட்டுள்ளது என்றும் அவருக்கு உடனடியாக பாதுகாப்பு தேவை என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஒபிஎஸ் - இபிஎஸ் என இரண்டு தரப்பினரிடையேயான மோதல் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் - சிவி சண்முகம் தொடர்பாக பொன்னையன் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, பொன்னையன் அண்ணனை ஆயிரம் வார்த்தைகளால் பாராட்டலாம்; 4 வருடம் நடந்த பணக் கொள்ளையையும், சாதி வெறியையும் கூறிவிட்டார். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் பொன்னையன் உயிருக்கு ஆபத்து ஏற்ப்பட வாய்ப்புள்ளதால் அவருக்கு பாதுகாப்பு தேவை என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…