14 வயது மாணவன் ஒருவன் அரசுப்பள்ளியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள அன்வாரி கிராமத்தை சேர்ந்த மாணவன் கங்கண்ணா, அதே கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கம் போல் மாணவன் கங்கண்ணா பள்ளிக்கு சென்றுள்ளான். ஆனால் அவன் பள்ளிக்கு செல்லாமல் அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர் ஒருவர் பள்ளி வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…