அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்.பி., மனோஜ் பாண்டியன் உள்பட 5 பேர் இரவு டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஈபிஎஸ் அணியினரால் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பட்டில்களை கொண்டு எரிந்தும், டயர்கலை பஞ்சர் செய்தும் அவமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் தனது ஆதரவு நிர்வாகிகள் மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட 4 பேருடன் இன்றிரவு (ஜூன் 23) டில்லி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்கு, ஒற்றைத் தலைமை பிரச்சனை குறித்து, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி, தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் முறையிட ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…