கள்ளக்குறிச்சி சம்பத்தையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளையும் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான தகலில், தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளில், பள்ளி உள்கட்டமைப்பு, உரிய அனுமதி, விடுதி கட்டடம், தீ தடுப்பு ஏற்பாடு உள்ளிட்டவைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், உண்டு உறைவிட பள்ளிகளில் அனைத்தும் உரிய அனுமதி பெற்று செயல்படுகிறதா என்று ஆய்வுக்கு உட்படுத்த வேண்டு என பள்ளிக்கல்வித்துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…