உக்ரைன் மரியுபோல் நகரில் சரணடைந்த 1,000க்கும் மேற்பட்ட உக்ரேனிய வீரர்கள் விசாரணைக்காக ரஷ்யாவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையே 100 நாட்களை கடந்து போர் நடைபெற்று வருகிறது. போரை நிறுத்த இந்தியா போன்ற மூன்றாம் நாடுகள் கடும் முயர்சி செய்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் வழங்கி போரை ஊக்குவித்து வருகின்றன. இந்நிலையில் டொன்பாஸ் பகுதியை கைப்பற்றுவதில் ரஷ்யா தீவிரம் காட்டி வருவதாகவும், அதன்படி ஏராளமான ரஷ்ய படைகள் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக உக்ரைன் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைதொடர்ந்து கருங்கடலில் உக்ரைனை சுற்று வளைத்து முகாமிட்டுருந்த ரஷ்யா கப்பல்கள் நகரத்தொடங்கியுள்ளது. உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கியுள்ளதாகவும், ஏவுகணைகளின் வீச்சில் இருந்து தப்பிக்கவே ரஷ்யா கருங்கடலில் 100 கி.மீ பின் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைனில் மரியுபோல் நகரில் உள்ள உருக்கு ஆலையில் சரணடைந்த உக்ரைன் வீரர்களை ஒப்பந்தத்தின் அடிப்படையில், ரஷ்யா கைதிகளை பரிமாற்ரி வருகிறது. இந்த நிலையில் சுமார் 1000 உக்ரைன் வீரர்களை மட்டும் ரஷ்யா நாடு கடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வீரர்களிடம் ரஷ்யா விசாரணை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…