மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் உணவு உட்கொண்ட 60 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்ப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
புசாத் தாலுகாவுக்கு உட்பட்ட செம்பல்பிம்ப்ரி கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், உணவு உண்ட பிறகு, பல விருந்தினர்கள் வாந்தி, மயக்கம் ஏற்ப்பட்டதாக மாவட்ட சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனையடுத்து அவர்கள், ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள கல்மனுரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நோயாளிகளின் உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரி தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…