குடும்ப பிரச்சனை காரணமாக போதையில் ஆணுறுப்பையும், கழுத்தையையும் அறுத்து ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையில் செல்லும் சாலையில் தனியார் விடுதியில் அறை எடுத்து, நாமக்கல்லை சேர்ந்த சீனிவாசன் என்பவர் எலெக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் குடும்ப பிரச்சனையால் ஏற்ப்பட்ட மன உளைச்சல் காரணமாக , மது அறுந்திய நிலையில், போதையில் பிளேடால் தனது ஆணுறுப்பையும், கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக்கண்ட பக்கத்து விதியில் தங்கியிருந்தவர்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் மிதந்தவாறு கிடந்தவரை மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போதையில் பிளேடால், ஆணுறுப்பையும், கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…