தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பேருந்துகளில் சிசிடிவி கேமரா,அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப் பட்டுள்ளன. இதில் முதற்கட்டமாக 500 பேருந்துகளின் சேவையை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். பெண்களுக்கு பேருந்தில் பயணிக்கும் போது பாலியல் தொல்லை, திருட்டு போன்ற எந்தவிதமான பிரச்சனைகள் என்றாலும் அவசர அழைப்பு பொத்தானை அழுத்தலாம். இதனால் பெண்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும் என கூறுகிறார்கள்.
இந்த ஒலி நேரடியாக கட்டுப்பாட்டு அறையில் ஒலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்குமாம். இதன் மூலம் பெண்கள் அல்லது குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளின்போது, அருகிலுள்ள காவல்துறை அதிகாரிகளின் பார்வைக்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்த ஏற்பாடு.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…