நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ள நிலையில், அவர் முதல்வரை நேரடியாக சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டனர்.
தீர்ப்பு வந்த சிறிது நேரத்திலேயே போன் மூலம் பேரறிவாளன் மற்றும் அற்புதம்மாளிடம் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று மாலை பேரறிவாளன் மற்றும் அற்புதம்மாள் இருவரும் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
அப்போது பேரறிவாளனை முதல்வர் ஸ்டாலின் கட்டியணைத்து வரவேற்றது குடும்பத்தினரை நெகிழ்ச்சியடையச் செய்தது. முதல்வர் இன்று கோவை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததால், இந்த சந்திப்பு சென்னை விமான நிலையத்தில் நடந்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…