உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பேரறிவாளனின் 31 ஆண்டுகால சட்டப்போராட்டம் தற்போது முடிவுக்கு வந்தது. பேரறிவாளனை அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சட்டப்பட்ட பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், சட்டப்படி ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்கும் சக்தி குடியரசுத் தலைவருக்கு கிடையாது . அது மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது. ஆளுநர் அமைச்சரவை முடிவிற்கு கட்டுப்பட்டவர். அவர் அதில் முடிவு எடுக்க வேண்டும். மாறாக 3 வருடமாக ஒரு முடிவை கிடப்பில் போட கூடாது என பல சட்ட நுணுக்கங்களை சுட்டிக்காட்டி தமிழக அரசு சார்பில் வாதிட்டப்பட்டது.
இதனையடுத்து பேரறிவாளனை அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இதனையடுத்து ஒரு தாயின் அறப்போர் வென்றது. அற்புதம் அம்மாளின் நெடும்போருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி; அனைத்து சனநாயக சக்திகளின் நல்லாதரவு மற்றும் தமிழக அரசு நல்கிய ஒத்துழைப்பால் விளைந்த நீதி. நீதிபதிகளின் நேர்மைக்கு பாராட்டுகள் என எம்பி தொல்.திருமாவளவன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து ட்வீட் செய்துள்ள நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார், “ஒரு தாயின் பாசத்துக்கு கிடைத்த வெற்றி. வாழ்த்துகள் பேரறிவாளன்” என பதிவிட்டுள்ளார்.
தன் மகனுக்காக ஒரு தாய் நடத்திய போராட்டம் இறுதியில் வெற்றியைத் தந்திருக்கிறது. உண்மையிலேயே தன் மகனின் விடுதலைக்காக, எல்லா அமைப்புகளுக்கும் எதிராகப் போராடிய தாயின் எழுச்சியூட்டும் கதை. ட்ரோல்கள் சிறிது நேரம் காத்திருக்கலாம்’ என்று குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…