நாடு முழுவதும் சமீப காலமாக நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிட்புல் ரக நாய் ஒன்று பசுவை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பயமுறுத்தும் அந்த வீடியோவில், நாய், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள போராடும் பசுவின் தாடையை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். கான்பூரின் சர்சய்யா காட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மூர்க்கதனமாக நாய் பசுவின் தாடையை கடித்து கவ்விக் கொண்டது. சிறிது நேரம் பசு போராடிய நிலையில், பசுவின் உரிமையாளர் நாயை கரும்பு கட்டையால் தாக்கி மாட்டை காப்பாற்றியுள்ளார்.
இச்சம்பவத்தால் மக்கள், குறிப்பாக சுற்றுலா பயணிகள் பீதியடைந்துள்ளதால், தற்போது பலரும் அங்கு செல்லவே அச்சப்படுகின்றனர்.
कानपुर के सरसैया घाट पर ‘पिटबुल कुत्ते’ ने कर दिया गाय पर हमला।
— Shubhankar Mishra (@shubhankrmishra) September 22, 2022
- ग्रामीणों की काफी देर की मशक्कत के बाद गाय को पिटबुल की कैद से छुड़ाया जा सका।
- इस बीच पिटबुल डॉग ने गाय का जबड़ा चबा लिया।
- इस घटना के बाद घाट पर जाने से कतरा रहे हैं सैलानी।
pic.twitter.com/yvbBN5EgSS
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…