ஜில்லுனு ஒரு காதல் படத்தில் குந்தவையாக நடித்த ஜோதிகா, தனது கணவர் திருமணத்திற்கு முன்பு ஒருவரை காதலித்தது தெரியவந்து, கணவரை காதலியுடன் சேர்த்து வைப்பது போல் காட்சிகள் இருக்கும். அது போல் நிஜ குந்தவையாக ஒரு பெண் செய்த செயல் தான் தற்போது ஆந்திராவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நடந்தது என்ன? ஆந்திரப்பிரதேசத்தின் திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கல்யாண். இவர் டிக் டாக்கில் பிரபலமாக இருந்த நிலையில், கடப்பாவை சேர்ந்த விமலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இதற்கிடையே விமலாவுக்கு முன்பாக, விசாகப்பட்டினத்தை சேர்ந்த நித்யஸ்ரீ என்ற பெண்ணை கல்யாண் காதலித்தது மனைவிக்கு தெரிய வந்துள்ளது. அந்த காதலை மறந்து விட்டு தான் தன்னை கல்யாண் திருமணம் செய்து கொண்டார் என்பதையும் விமலா அறிந்து கொண்டார்.
இதையடுத்து கணவரின் காதல் ஆசையை நிறைவேற்றி வைத்து, நித்யஸ்ரீயை தன் கணவருக்கே திருமணம் செய்து வைத்துள்ளார் விமலா. நித்யஸ்ரீயை கல்யாணம் செய்த பிறகு 3 பேரும் ஒன்றாக ஒரே வீட்டில் இருக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தையும் எழுதி வாங்கிக் கொண்டு கல்யாணத்தை நடத்தியுள்ள விமலா, தனது காதல் கணவர் மற்றும் கணவரின் காதலியுடன் சேர்ந்து போட்டோ எடுத்து அதை பகிர்ந்துள்ளார்.
கணவருக்கு காதலியுடன் திருமணம் செய்து வைத்து நிஜ குந்தவையாக மாறியுள்ள விமலாவின் செயல் தற்போது ஆந்திரா முழுவதும் வைரலாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…