27,000 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று கர்நாடகா செல்கிறார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, கர்நாடகாவுக்கு புறப்பட்டு, பெங்களூரு மற்றும் மைசூருவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளேன். முதல் நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) மூளை ஆராய்ச்சி மையம் திறக்கப்படும். பாக்சி-பார்த்தசாரதி மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் அடிக்கல் நாட்டப்படும் என தெரிவித்தார். மேலும், இன்று மாலை 5.30 மணியளவில் மைசூரு செல்லும் பிரதமர் மோடி, அங்கும் முக்கிய வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மைசூரில் நாளை காலை யோகா தின நிகழ்ச்சியிலுக் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட தீவிர முயற்சி எடுத்து வரும் நிலைஒயில் பிரதமர் மோடியின் கர்நாடக பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…