கிட்னி திருடி அதை பேஸ்புக் மூலம் விற்று வந்த கும்பலை டெல்லி காவல்துறையின கைது செய்துள்ளனர்.
டெல்லியில் ஏழைகள் மற்றும் ஆதரவற்றோரை குறிவைத்து கிட்னியை திருடி வந்த 10 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மருத்துவர் எனவும், மற்றவர்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் உதவியாளர்கள் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பணம் தேவைப்படுவோர்களை குறிவைத்தும் , குறிப்பாக 10 முதல் 30 வயது வரை உள்ளவர்களை மூளைச்சலைவை செய்து, அவர்களிடம் கிட்னியை பெற்று, அவற்றை பேஸ்புக் மூலம் விற்று வந்ததாக கூறப்படுகிறது. டெல்லி முழுவதும் இதுவரை சுமார் 20 கிட்னி வரை எடுத்து விற்று வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…