Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோயில் திருவிழா நடத்த போலீசார் அனுமதி தேவையில்லை

Bala August 16, 2022 & 15:32 [IST]
கோயில் திருவிழா நடத்த போலீசார் அனுமதி தேவையில்லைRepresentative Image.

கிராமங்களில் கோயில் திருவிழா நடத்த போலீசார் அனுமதி தேவையில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் வளையபட்டி கிராமத்தில் உள்ள  பட்டையரசி அம்மன் கோயில் திருவிழா பல ஆண்டுகளாக எந்தபிரச்சனையும் இல்லாமல் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு பொங்கல் திருவிழா ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி முதல் 20 வரை நடத்தப்பட திட்டமிட்டு அதற்காக போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டதாக ஆனால் போலீசார் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி, ஜி.ஆர். சுவாமிநாதன் தலைமையில் விசாரனைக்கு வந்தது. அப்போது, கிராமங்களில் திருவிழா நடத்த போலீசார் அனுமதி தேவையில்லை என்றும், ஒலிபெருக்கி வைப்பதற்கு, ஆடல் பாடல் போன்ற நிகழ்சிகளுக்கு மட்டுமே போலீசார் அனுமதி தேவை என்று நீதிபதி தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இல்லை எனக்கூறி திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கி வழக்கினை முடித்துவைத்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்