தனிமையில் இருந்த காதல் ஜோடியிடம் போலீஸ் எனக்கூறி மிரட்டி மர்ம நபர் நகை பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை அடுத்த வண்டலூர் உயிரியியல் பூங்கா அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், கல்லூரி காதல் ஜோடிகள் தனிமையில் இருந்துள்ளனர். இதனைக் கண்ட மர்ம நபர் ஒருவர், தான் போலீஸ் என்று அவர்களை மிரட்டி வந்துள்ளார். மேலும் கல்லூரி பெண்னிடம் நகையை வாங்கிய அந்த நபர், காவல் நிலையம் வந்து நகையை பெற்றுக்கொள்லும் படி தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்நிலையம் சென்ற காதல் ஜோடிகள் தங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை உணரத் தொடங்கினர்.
மேலும், புகார் அளித்தால் நகை பறிகொடுத்த விஷயம் வீட்டுக்கு தெரிய வரும் என்பதால், அவர்கள் காவல்நிலையத்திலும் புகார் அளிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…