பிரபல நடிகை சாய் பல்லவி சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
தனது குடும்பத்தினருடன் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க குடும்பத்துடன் கோவிலுக்கு வந்திருந்த சாய் பல்லவி, தன்னை யாரும் அடையாளம் கண்டு விடக் கூடாது என்பதற்காக முகக்கவசம் அணிந்த படி சென்று சாமி தரிசனம் செய்தார்.
அப்போது பாதுகாப்புக்காக அவரோடு சென்ற காவலர்கள் சிலருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள முகக்கவசத்தை கழற்றிய போது தான், அங்கு சாய் பல்லவி வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
கோவிலில் காவலர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…