பிரியங்கா காந்தி வத்ராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அவரது தாயாருமான சோனியா காந்திக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று பிரியங்கா காந்திக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டுவிட் செய்துள்ள பிரியங்கா காந்தி; லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…