புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரு கோவில் திருவிழாவில் போலீசார் முன்னிலையிலேயே ஆபாச ஆடல் பாடல் நிகழ்ச்சி அரங்கேறியது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ளது மேலசிவபுரி கிராமம். இங்குள்ள விநாயகர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல்பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆடல் பாடல் நிகழ்ச்சி என்பதால் அதை பார்த்து கண்டுகளிக்க ஆண்கள் மட்டுமல்லாது ஏராளமான பெண்கள் மற்றும் சிறுவர்களும் குவிந்திருந்தனர்.
இந்நிலையில், ஆடல் பாடல் நிகழ்ச்சி எனக் கூறி, நடனக் கலைஞர்கள் ஆபாச நடனம் ஆடியது அங்கிருந்த பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.
இதற்கிடையே, இது அந்த கடவுளுக்கே பிடிக்கவில்லை என்பது போல, மழை பெய்து ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு இடைஞ்சல் உருவானது. ஆனால் மழையையும் பொருட்படுத்தாமல் ஆபாச நடனம் தொடர்ந்து நடந்த நிலையில், இதை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டிய போலீஸ் முன்னிலையிலேயே இந்த ஆபாச நடன நிகழ்ச்சி நடந்து முடிந்தது பொதுமக்களை வேதனைக்குள்ளாக்கியது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…