மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை சட்டையில்லாமால் பார்க்க சகிக்காது என ரஷ்யா அதிபர் புதின் கிண்டலடித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் 3 மாதங்களை கடந்து இன்னும் உக்கிரமாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் களமிறங்கிய நிலையில், தனி ஆளாக இன்னும் ரஷ்யா உக்கிரமாக போர் நடத்தி வருகிறது. குறிப்பாக மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஆயுத கிடங்குகளை குறிவைத்தும், ராணுவ நிலைகளை குறி வைத்தும் ரஷ்யா துல்லிய தாக்குதலை நடத்தி வருகிறது. முதலில் உக்ரன் கை ஓங்கியிருந்தாலும், தற்போது மேற்கத்திய நாடுகளின் ஆர்வம் குறைந்ததால் உக்ரைன் பின்னடைவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 நாடுகளின் கூட்டத்தில் பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், ரஷ்ய அதிபரை விட நாமும் கொடூரமானவர்கள் என்பதை உலகிற்கு காட்ட நாமும், சட்டையில்லாமல், குதிரை சவாரி செய்ய வேண்டும் என கிண்டலடித்தனர். இதற்கு பதிலடியாக மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை சட்டையில்லாமல் பார்க்க சகிக்காது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…