ரஷ்யாவை விட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறியதற்கு அந்நாடு அதிபர் புடின் நன்றி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்தன. மேலும் சில நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறின. இதற்கு நன்றி தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின், வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறியது, உள்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இடமளிக்கிறது என்றும், அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட சொகுசு சாதனங்களை இனி ரஷ்யாவே உருவாக்கும் என கூறினார்.
ரஷ்யாவை தனிமைப்படுத்தும் மேற்கத்திய நாடுகளின் முயற்சிகள் தோல்வியடையும் என்று புடின் உறுதியளித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…