புதுச்சேரியில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 26ஆம் தேதி தொடங்கும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையில், 26 ஆம் தேதி மொழிப்பாடத்திற்கான தேர்வு தொடங்கி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு அடுத்தடுத்த நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு காலையும், ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு மதியமும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு முதல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்ததும், அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படுவதாகவும், ஆறாம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…