குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் எம்பிகளை டெல்லி காவல்துறை கைது செய்து வேனில் ஏற்றியது.
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மையை, அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதை கண்டித்து சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இருந்து குடியரசு தலைவர் மாளிகை நோக்கி கருப்பு உடை அணிந்து பேரணியாக சென்றனர்.
இந்நிலையில், பேரணியில் ஈடுபட்ட ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் எம்பிக்களை கைது செய்த டெல்லி காவல்துறை அவர்களை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றியது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…