விழுப்புரம் அருகே உயிரிழந்த பட்டியிலின பெண்ணின் உடலை புதைக்க இடம் கிடைக்காததால் 3 நாட்களாக போராடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த கொட்டியாம்பூண்டி கிராமத்தில் 10க்கும் மேற்ப்பட்ட பட்டியிலின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களில் உயிரிழப்பு ஏற்படும் போது புதைப்பதற்கு மயானம் இல்லாததால், நீர் நிலைகள் அருகே புதைத்து வருகின்றனர். இது குறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் அவர்கள் மனு அளித்தும் இதுவரை அவர்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், கடந்த 18 ஆம் தேதி கொட்டியாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சத்தியநாராயணன் மனைவியான அமுதா என்ற பெண் இறந்துள்ளார். அவரது உடலை புதைக்க ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 3 நாட்களாக உடலை வைத்துக்கொண்டு செய்வதறியமால் நிற்கின்றனர். இதனையடுத்து நிலையான இடுகடு கேட்டு அமுதாவின் உடலை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…