அரசுப்பள்ளிகைல் படிக்கும் மாணவர்களுக்கு காலையில் பால் வழங்கப்படும் என்ற மாநில அரசின் அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இடைநிற்றலை குறைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இதனை பிந்தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில், ராஜஸ்தானில், அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் பால் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 69.21 லட்சம் மாணவர்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பவுடரில் தயாரிக்கப்பட்ட பால் வழங்கப்படும் என்று கூடுதல் தலைமைச் செயலர் (கல்வி) பவன் குமார் கோயல் தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…