ராஜஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக குழியில் மூழ்கி 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜோத்பூரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து மழைநீர் நிரம்பிய குழியில் செவ்வாய்க்கிழமை ஒரு பெண் உட்பட 4 குழந்தைகள் மூழ்கி பலியாகியுள்ளனர். அனிதா (15), சஞ்சு (16), பிந்து (12) மற்றும் கிஷோர் (12) ஆகியோர் அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நான்கு குழந்தைகளின் இறப்புக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார். சிரஞ்சீவி விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், உயிர் பிழைக்கும் குழந்தைக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து 20,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார். மேலும், மழைக்காலத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…