கர்நாடகாவிற்கு வந்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று முன்தினம் (மே 26) ஐஎன்எஸ் கந்தேரி நீர்மூழ்கி கப்பலில் முதல்முறையாக அரபி கடலுக்கு அடியில் சுமார் 1 மணி நேரம் பயணித்துள்ளார். அப்போது அதிநவீன வசதிகள் கொண்ட நீர்மூழ்கி கப்பலின் போர் திறன் குறித்து வீரர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
இது தொடர்பாக பேசிய அவர், நீர்மூழ்கி கப்பல் பயணத்தில், அற்புதமான, சிலிர்ப்பான அனுபவம் கிடைத்தது'' என அவர் உற்சாகத்துடன் தெரிவித்தார்.மேலும், இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘விக்ராந்த்’ மிக விரைவில் இயக்கப்பட உள்ளதாகவும், இது ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவுடன் இணைந்து நாட்டின் கடல் பாதுகாப்பை மேம்படுத்தும். இந்திய கடற்படையின் ஏற்பாடுகள் எந்தவொரு ஆக்கிரமிப்பு, ஆத்திரமூட்டலுக்காக இல்லை என்றும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக தான் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இன்று, இந்திய கடற்படை உலகின் முன்னணி கடற்படைகளில் ஒன்றாக திகழ்வதாகவும், உலகின் மிகப்பெரிய கடல் படைகள் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றவும், ஒத்துழைக்கவும் தயாராக உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…