மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஒருமனதாக ஆதரிக்க பாமக முடிவு செய்துள்ளதாக ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்களுக்கு ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் , அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் அதிமுக நிர்வாகிகள் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக பாஜக அறிவித்தது.
இதனையடுத்து தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு வழங்க கோரினார். இந்நிலையில் அதிமுக வேட்பாளரை ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…