கர்நாடகவில் விவசாய சங்க தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
தேசிய விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயித் பெங்களூருவில் செய்தியாளர் சந்திப்பின் போது கருப்பு மையால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பேசிய ராகேஷ் திகாயித் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு முறையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், இது பாஜக அரசின் திட்டமிட்ட சதி என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் நாற்காலிகளை வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்திற்கு விவசாய தலைவர் ராகேஷ் திகாயித் பெரும் பாங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…