மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் புறப்பட்டபோது பாஜகவினர் செருப்பை வீசி தாக்கியதாக தொடர்பாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது; நேற்றைய தினம் மதுரை விமான நிலையத்தில் யாருமே விரும்பாத கசப்பான சம்பவம் நடைபெற்றது. பண்புமிக்க கண்ணியமிக்க மதுரையில் இது போன்று நடைபெற்றதில்லை, துரதிருஷ்டவசமாக இந்தசம்பவம் நடந்துள்ளது என முன்னாள் அமைச்சர், ஆர்.பி.உதயகுமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும், உணர்ச்சி கொந்தளிப்பில் விரும்பத்தகாத கையில் பாஜக தொண்டர்கள் நடந்து கொண்டது வேதனையளிக்கிறது, கசப்பான நிகழ்வு இது, அந்த நிகழ்வால் மனம் வேததைப்பட்டதாக சரவணன் தெரிவித்துள்ளார்; வேதனையை வெளிப்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது என்றும் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…