ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில் கட்டுப்பாட்டு அறை எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டால் 1070 மற்றும் 0462-501012 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மீட்பு பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரக்கோனத்தில் இருந்து பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…