வெள்ளப்பெருக்கு காரணமாக தொடர்ந்து 7வது நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கர்நாடகவில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து, கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து 1.20 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி கரையோர பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒகேனக்கல்லில் விநாடிக்கு 1,25,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தொடர்ந்து 7வது நாட்களாக ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை கொண்டு செல்லவோ வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அங்கு வந்தெள்ள பயணிகள், அருவியின் இரைச்சலையும், கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தையும் மட்டும் பார்த்துவிட்டு திரும்பி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…