நாமக்கல்லில் நடந்த ஏலத்தில் பருத்தி விலை உச்சத்தை தொட்டுள்ளதால் ஜவுளி வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஏலத்தில் திருச்சி, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் பருத்திவிலை புதிய உச்சம் தொட்டுள்ளது. ஆர்.சி.எச் பருத்தி ரகம் குவிண்டால் ரூ.10,399 முதல் ரூ.13,950 வரை அதிகரித்து விற்பனையானது.
ஏற்கனவே நூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி வியாபாரிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தற்போது பருத்தி விலை உச்சத்தை தொட்டுள்ளது அவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆடை விலை உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…