இன்று முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள நாசலூர் சுங்கச்சாவடியில் இன்று முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி நாவலூர் சுங்கச்சாவடியில் ஆட்டோ ஒருமுறை பயணிக்க கட்டணம் ரூ.10ல் இருந்து 11 ஆகவும், கர்களுக்கு, ரூ.30ல் இருந்து, 33 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இலகு ரக வணிக வாகனங்களுக்கு ரூ.49-ல் இருந்து ரூ.54 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்துக்கான கட்டணம் ரூ.78-ல் இருந்து ரூ.86-ஆகவும், சரக்கு வாகனங்களுக்கு ரூ.117-ல் இருந்து ரூ.129-ஆகவும், பல அச்சு வாகனத்திற்கு ரூ.234-ல் இருந்து ரூ.258ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…