கீழணை வற்றியதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடலூர் கீழணை வற்றியதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னைக்கு இன்று (ஜூன் 9) விநாடிக்கு 49 கன அடி நீர் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடும் வெயில் மற்றும் தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டு வருவதால் ஏரியின் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இந்நிலையில் நீர்வளத்துறை அதிகாரிகள் மேட்டூரில் இருந்து ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தண்ணீர் தேவை அதிகரிக்கும் நிலையில் வடலூர் முதல் பண்ருட்டி வரை உள்ள மெட்ரோ வாட்டர் போர்வெல்களில் தண்ணீர் எடுக்க மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…