உக்ரைனின் சேப்லின் ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா நடத்திய ராக்கெட் தாக்குதலில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான் போர் 6 மாதங்களை கடந்து இன்னும் உக்கிரமாக நடட்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் உக்ரைன் தனது சுதந்திர தினத்தை கொண்டாடியது. அப்போது, உக்ரைனின் நிப்ரோபெட்ரோவோக் மாகாணத்தில் உள்ள சேப்லின் நகர ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல் நடத்தி உள்ளது. இதில், குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர தினந்தன்று தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி கொடுக்கப்படும் என உக்ரைன் அதிபர் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…